என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் மருந்து விற்பனை தடை"
சென்னை:
ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், ‘ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்தும் விதிமுறைகள் மத்திய அரசு வகுப்பதாக கூறுவதால், அவ்வாறு விதிமுறை உருவாக்கி, அரசிதழில் வெளியான பின்னர், உரிய உரிமத்தை ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் பெறவேண்டும். அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது’ என்று கடந்த 17-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், இடைக்கால மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இடைக்கால மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ‘ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு, இடைக்கால தடை பிறப்பிக்கின்றோம். இந்த பிரதான வழக்கு விசாரணையை அடுத்த வாரத்தில் விசாரிக்கப்படும்’ என்று கூறியுள்ளனர். #HighCourt #OnlineMedicineSale
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்